states

img

தில்லி: பாஜக தலைமையகத்தில் 50 பேருக்கு கொரோனா

யதில்லி பாஜக தலைமையகத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கடந்த திங்களன்று, பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டாவுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தல் தொடர்பான பாரதிய ஜனதா கட்சியின் கோர் கமிட்டி கூட்டம், அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதன் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் இன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பாஜக தலைமையகத்தில் பாஜக ஊடக இணைத் தலைவர் சஞ்சய் மயூக், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.