புதுச்சேரி, மார்ச் 17- ஒன்றிய பாஜக அரசின் தொழி லாளர் விரோத கொள்கைகளை கண்டித்து இம்மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்க புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி செயல் தலைவர் அபிஷேகம் தலைமை தாங்கினார். சிஐடியு துணைத் தலைவர் பொன்முடி, ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் டி.எம். மூர்த்தி, ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளர் சேவியர், ஏஐசிசிடியு தலைவர் ஞானதேசிகன், எம்எல்எப் தலைவர் மணிமாறன், எல்எல்எப் தலைவர் கவுதம் சன்னா, ஏஐயுடியுசி அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பி னர் அனவரதன், என்டிஎல்எப் தலை வர் லோகநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிஐடியு புதுச்சேரி பிரதேச தலைவர் முருகன், செயலாளர் சீனிவாசன், ஏஐடியுசி மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச்செயலாளர் சேது செல்வம், ஐஎன்டியுசி மாநிலத் தலைவர் பாலாஜி, ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் மோதிலால், ஏஐடி யுசி நிர்வாகி சங்கரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.