states

img

முதல்வர் ரங்கசாமியுடன் உக்ரைன் மாணவி சந்திப்பு

புதுச்சேரி, மார்ச் 2- உக்ரைனிலிருந்த புதுச்சேரிக்கு திரும்பிய மாணவி முதல்வர் ரங்க சாமியை சந்தித்து நன்றி தெரிவித்தார். உக்ரைனில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள்  முதலமைச்சர்  ரங்கசாமியை சந்தித்து, தங்களது பிள்ளைகளை உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக அழைத்துவர உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு இரண்டு தினங்களுக்கு முன்பு வலியுறுத்தி இருந்தனர். மேலும் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர ஒன்றிய அரசின்  பிரதமர் மற்றும்  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் ஆகி யோரிடம் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் உக்ரைனில் தங்கி படித்து வந்த புதுச்சேரி வீராம்பட் டினத்தைச் சேர்ந்த தெய்வ சிகாமணியின் மகள் ரோஜா சிவமணி உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக புதுச்சேரிக்கு செவ்வாயன்று (மார்ச் 1) அழைத்து வரப்பட்டார். இதையடுத்து மாணவி தனது பெற்றோருடன் முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து  நன்றி கூறினார்.