states

img

சாலையோர வியாபாரிகளிடம் அடி காசு வசூலிப்பதை கைவிடுக

புதுச்சேரி, மே 13- புதுச்சேரி நகராட்சிக் குட்பட்ட சாலையோர வியா பாரிகளிடம் குண்டர்களை வைத்து அடி காசு வசூலிப் பதை உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் பிரதேச சிறப்பு தலைவர் பிரபு ராஜ் தலைமையில் புதுச் சேரி அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் பெருமாள், சிஐ டியு பிரதேச துணைத்  தலைவர் ராமசாமி, செயலா ளர் சீனிவாசன், நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், சங்கத் தலைவர் அழகர்ராஜ்,  பொதுச் செயலாளர் வடி வேல், பொருளாளர் வீரமணி கண்டன், ராஜ்குமார், நிர்வா கிகள் சுரேஷ், அன்பழகன், கெம்புராஜ் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்ட னர். முன்னதாக காமராஜர் சிலையில் இருந்து ஊர்வல மாக புறப்பட்டு கம்பன் கலை யரங்கத்தில் உள்ள நகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வியா பாரிகளை, அண்ணாசாலை யில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.