states

10ஆம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு இணையதளத்தில் நுழைவுச்சீட்டு

புதுச்சேரி, ஏப். 20- 10ஆம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என புதுச்சேரி பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மே மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், புதன்கிழமை (ஏப் 20) முதல், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை இணையதளத்தில், தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் வரும் 27ஆம் தேதி துவங்கி, 29ஆம் தேதி வரை நடைபெறும். செய்முறை தேர்வு, மாணவர்களுக்கு வில்லியனூர், ஐடியல் ஆங்கில மேல்நிலைப் பள்ளியிலும், மாணவியருக்கு உப்பளம் இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது. செய்முறை தேர்வு விவரத்தை தனித்தேர்வர்கள் வரும் 25ஆம் தேதி செய்முறை பயிற்சி பெற்ற பள்ளி முதல்வர், தலைமையாசிரியரை தொடர்பு கொண்டும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.