புதுச்சேரி, ஏப். 5- ஒன்றிய பாஜக அரசின் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், அநியாய மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் புதுச்சேரி முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. திருக்கனூர் கடைவீதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மண்ணா டிப்பட்டு கொம்யூன் கமிட்டி செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். பிரதேச செயலாளர் ராஜாங்கம், பிரதேச குழு உறுப்பினர்கள் சங்கர், கலியன், சரவணன், கொம்யூன் குழு உறுப்பினர்கள் விநாயகம், தட்சிணா மூர்த்தி, அமிர்தவல்லி, கந்தநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வில்லியனூர் நெட்ட பாக்கம் கமிட்டி செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், பிரதேச குழு முன்னாள் உறுப்பினர்கள் நடராஜன், ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.