states

மின்துறை தனியார்மயம் போராட்டத்தை தீவிரப்படுத்தும் அரசியல் கட்சிகள்!

புதுச்சேரி, மே.28- புதுச்சேரியில் மின்துறை தனியார்மயத்தை எதிர்த்து மதச்சார்பற்ற கட்சிகள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின்துறை ஊழி யர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சம்மேளனம், சிஐடியு, ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட மத்திய  தொழிற்சங்கங்களும் போராட்டக்குழு அமைத்து போராடி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, விசிக உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திய நாதன் எம்எல்ஏ, திமுக அமைப்பாளர் சிவா, அவைத்தலைவர் எஸ்பி.சிவக்குமார், சிபிஎம் பிரதேச செயலாளர் ராஜாங்கம், மூத்த தலைவர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், சேது செல்வம், விசிக முதன்மை செயலாளர் தேவபொழிலன், மதிமுக மாநிலத் தலைவர் கபிரியேல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் உமர் பாரூக், மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் இஸ்மாயில் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர். லாபத்தில் இயங்கும் மின்துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 31ஆம் தேதி மனிதசங்கிலி போராட்டமும், ஜூன் மாதத்தில் தமிழகத்திலிருந்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்கள் நடத்துவது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், ஜூன் 2ஆவது வாரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற நாடளுமன்ற உறுப்பினர்கள், அதேபோல் தமிழகத்திலுள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தலைமையில் புது தில்லியில் போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

;