புதுச்சேரி, டிச.12- புதுச்சேரி முன்னாள் முதல மைச்சர் நாராயணசாமி திங்க ளன்று (டிச.12) செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எதிர்க்கட்சிகளை கொண்டு குறுக்கு வழியில் ஆட்சிய மைவதை விரும்பவில்லை என்று பிரதமர் மோடி பேசி யுள்ளதை வரவேற்கிறேன். இந்த அறிவுரையைக்கூற மோடிக்கு தகுதி உள்ளதா? என்றால் இல்லை. மணிப்பூர், கோவா, கர்நாடகம், மகாராஷ்டிரா, திரிபுரா என பல மாநிலங்களில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சியமைத்தது. இதற்கு தலைமை தாங்கியது மோடிதான். உண்மைக்கு மாறான தகவல் தெரிவித்து உத்த மர் போல் மோடி பேச வேண்டாம். ஆன்லைன் சூதாட்டம்: தடை எப்போது? நாட்டில் பல மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலை யில், தமிழ்நாட்டில் ஆளுநர் அனுமதி தரவில்லை. ஆன்லை சூதாட்டத்தினால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்துள்ளது. புதுவையிலும் பொறியாளர் ஒருவர்தற்கொலை கொண்டுள்ளார். புதுவையிலும் ஆன் லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறி வித்தார். இதுவரை தடை விதிக்கப்படவில்லை. இதற்கு ஆளுங்கட்சி எம்எல்ஏக்களே சூதாட்டம் நடத்துவதுதான் காரணம் என தெரிகிறது. அவசர சட்டத்தை கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும். ஊழல் மலிந்த ஆட்சி என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. இடைத் தரகர்கள் முதலமைச்சர் அலுவலகத்தில் இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறேன். இதற்கு அரசு தரப்பில் இருந்து யாரும் பதில் தரவில்லை. அதே நேரத்தில் ஊழலை சுட்டிக்காட்டினால், நட வடிக்கை எடுப்பதாக பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறினார். இப்போது அவர் எங்கே இருக்கிறார்? மதுபானத் தொழிற்சாலையி லிருந்து ரூ.90 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரமே கூறி னார். மதுபானக் கடைகளை இட மாற்றம் செய்ததில் ஊழல் நடந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் ஊழல் தொடர்கிறது. ஊழல்களை ஆதாரத் தோடு காங்கிரஸ் தொடர்ந்து வெளிப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.