ஒன்றிய பாஜக அரசு எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வலியுறுத்தி காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொக்கு பார்க் கிளை எதிரே கிளைத் தலைவர் சபாபதி தலைமையில் சுடர் ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் கோட்ட சங்க துணைத் தலைவர் வி.நாகராஜன், நிர்வாகிகள் ஜனகர், மனோகர், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எல்ஐசி பங்கு விற்பனைக்கு எதிராக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் வேலூர் கோட்ட அலுவலக வளாகத்தில் மாவட்டத் தலைவர் பழனிராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் ராமன், பொருளாளர் செந்தில்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.