states

img

புதுச்சேரி மின்துறை தனியார்மயத்தை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் தர்ணா  

புதுச்சேரி மின்துறை தனியார்மயத்தை கண்டித்து சிஐடியு,ஏஐடியூசி, ஐஎன்டியூசி,ஏஜசிசிடியூ, அரசு ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் திங்களன்று தர்ணா  நடைபெற்றது. புதுச்சேரி அண்ணாசிலை எதிரில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரேமதாசன் தலைமை தாங்கினார். தொழிற்சங்க தலைவர்கள் முருகன், ராமசாமி, வேல்முருகன், சீனிவாசன், தினேஷ் பொன்னையா, முத்துராமன், அருள்மொழி, ஞானசேகரன், செந்தில், வேணுகோபால், ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.