states

img

கழிப்பறை கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, அக். 19- திருவள்ளுவர் நகர் மக்களுக்கு கழிப்பறை வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் மதுரை வீரன் கோவில் தெருவில் வசிக்கும் மக்களுக்கும், கசாப்புகாரர் தோப்பு பகுதி மக்களுக்கும் பொது கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், தகர கொட்டகையில் வசிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும், கசாப்புகாரர் தோப்பில் வசிக்கும் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும், சுத்த மான குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. புதுச்சேரி முத்தியால்பேட்டை பாரதி தாசன் மகளிர் கல்லூர் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரக்குழு செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கி னார். மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் சீனுவாசன், கலியமூர்த்தி, சத்தியா, மாநிலக்குழு உறுப்பினர் சரவணன், கிளைச்செயலாளர் பாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 100 விழுக்காடு கழிப்பறை வசதி உள்ள தாகக் கூறி அண்மையில் ஒன்றிய பாஜக அரசு, புதுச்சேரி நகராட்சிக்கு விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

;