மக்கள் நலனை பாதுகாக்கவும் புதுச்சேரி மாநில உரிமையை மீட்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் அரசியல் சிறப்பு மாநாட்டை விளக்கி மண்ணாடிபட்டு கொம்யூன் செயலாளர் இரகு.அன்புமணி தலைமையில் திருக்கனூரிலும், லாஸ்பேட்டையில் உழவர்கரை நகரச் செயலாளர் ராம்ஜி தலைமையிலும் நடைபெற்ற பிரச்சாரத்தில் செயற்குழு உறுப்பினர் சத்தியா, மாநில குழு உறுப்பினர்கள் சங்கர், இளவரசி,ஆனந்த் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக சப்தர் ஆஷ்மி கலைக்குழுவின் கிராமிய அரசியல் நையாண்டி நிகழ்ச்சியும் நடைபெற்றது.