states

img

பிரிவினைவாதத்தை வளர்க்கும் பாஜகவுக்கு கண்டனம்

புதுச்சேரி,செப்.10- பிரிவினைவாதத்தை வளர்க்கும் பாஜகவை புறக்கணிக்க மக்கள் தயாராக வேண்டும் என்று நூல் அறிமுக விழா வில் எழுத்தாளர்கள்  வலி யுறுத்தியுள்ளனர். ‘புதுச்சேரி தமிழ்ச்  சங்கத் தில் நடந்த மகாத்மா மண்ணில் மதவெறி’நூல் அறிமுகக் கூட்டத்திற்கு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுவை செயலாளர் மணி. கலியமூர்த்தி தலைமை தாங்கினார். பல்கலைகழக பேராசிரியர் பா. ரவிகுமார், மார்க்சிஸ்ட் கட்சி யின் புதுச்சேரி மாநிலச் செய லாளர் ஆர்.ராஜாங்கம், தமு எகச  மாநிலசெயற்குழு உறுப்பினர் சு.ராமச் சந்திரன், புதுச்சேரி தமிழ் சங்கத் தலைவர் வி.முத்து, கலை இலக்கிய பெருமன்றத்தின் தலைவர் எல்லை. சிவக்குமார், திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, முஎகவின் புதுச்சேரி பிரதேச செய லாளர் உமாஅமர்நாத், புதுச்சேரி சமூக நல்லி ணக்க இயக்கத்தின் நிர்வாகிகள் பஷீர் அகமது, அலிஸ்தாமஸ் ஆகியோர் உரையாற்றினர். இந்த நூல் இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநில மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும் என்றும் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் பாஜகவிடம் இருந்து நாட்டை பாதுகாக்க இந்த நூலை அனைவரும் அவ சியம் வாசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னரும் நூல் ஆசிரியருமான ஜி.ராமகிருஷ்ணன் ஏற்புரை யாற்றினார். முன்னதாக, மகாத்மா மண்ணில் மத வெறி புத்தகத்தின் புதுச்சேரி விற்பனை ஜி.ராம கிருஷ்ணன் துவக்கி வைக்க,  முதல் பிரதியை  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் பாவலர் சண்முகசுந்தரம் பெற்று கொண்டார். இவ்விழாவில் புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பச்சையம்மாள், அருண்  குமார், ஹேமாவதி, அன்ப ழகன், ரமேஷ்பைரவி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

;