புதுச்சேரியின் மூத்த தொழிற்சங்கவாதியும், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கவுரவத் தலைவருமான சி.எச். பாலமோகன் சில நாட்களுக்கு முன்பு காலமானார். இந்நிலையில், முத்தியால்பேட்டை சோலை நகரிலுள்ள அவரது இல்லத்திற்கு திங்களன்று (மே 16) சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாலமோகனன் துணைவியார் சந்திரி அம்மாள், மகன் வைஜூ ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆலோசகர் பிரேமதாசன் ஆகியோர் உடனிருந்தனர்.