புதுச்சேரி, டிச. 15- புதுச்சேரி நோணாங் குப்பத்திலுள்ள அரசு படகு குழாம் சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படகு குழாமில் இருந்து ஆற்றின் முகத்துவாரம் வழி யாக பேரடைஸ் பீச்சுக்கு செல்ல வேண்டும். புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் அரசு இயக்கும் படகு மூலம் பேரடைஸ் பீச்சுக்கு சென்று வருவார்கள். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பேரடைஸ் பீச்சில் உணவகம் அமைக்கப்பட்டு, அங்கு உணவு வகைகள், பீர், குளிர்பானங்கள், சிற்றுண்டிகள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டன. மணல்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இருக்கை களில் அமர்ந்து சுற்றுலா பயணி கள் உணவருந்தலாம். ஒரு காபி ஷாப் மட்டும் உள்ளது. இங்கு வேறு கடைகள் இல்லை. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த உணவகத்தில்தான் உண வருந்துவர். கடந்த வாரத்தில் ஏற்பட்ட புயல் காற்று காரணமாக கொட்டகையின் ஒருபக்கம் சரிந்தது. இதையடுத்து உண வகத்தை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூடியுள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலாப் பய ணிகள் உணவுக்கு வழியின்றி அவதிப்படுகின்றனர். காபி ஷாப்பில் கிடைக்கும் சிற்று ண்டிகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இம்மாதம் டிசம்பர் மாதம் என்பதால் புதுவையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதி கரித்துள்ளது. இதனால் பேரடைஸ் பீச்சில் உள்ள உண வகத்தில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் முதல் ஒன்னரை லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெறும். இந்த விற்பனையும் பாதிக்கப் பட்டுள்ளது. கீற்று கொட்டகையில் ஏற்பட்டுள்ள சரிவைக்கூட உடனடியாக சரி செய்யாமல் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் உள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு வர வுள்ள நிலையில் உடனடியாக கொட்டகையை சீரமைக்க வேண்டும். சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்களுக்கு அரசு நிதி தருவதில்லை. தங்கள் வரு வாய் மூலம் ஊழியர்கள் சம்பளம் பெற வேண்டியுள்ளது. ஏற்கனவே 3 மாதமாக சம்ப ளம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகை யில் கொட்டகையை உடனடி யாக சீரமைக்காதது ஊழியர்க ளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.