states

புதுவையில் கொரோனாவுக்கு முதியவர் பலி

புதுச்சேரி, ஜூலை 23- புதுவையில்1,811 பேருக்கு கொ ரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 109, காரைக் காலில் 40, ஏனாமில் 6 பேர் என புதிதாக 155 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 20, காரைக்காலில் 1, ஏனாமில் 3 பேர் என 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 949, காரைக்காலில் 190, ஏனாமில் 26, மாகியில் 3 பேர் என ஆயிரத்து 168 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 172, காரைக் காலில் 20, ஏனாமில் 4 பேர் என 196 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை இளங்கோ நகரைச் சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

;