புதுச்சேரி, மார்ச் 15- விபத்தில் படுகாயமடைந்தவர்களை ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பாகூரில் அரசு ஆரம்ப நிலையத்தில் குரு விநத்தம், சோரியாங்குப்பம், சேலியமேடு, பரிக்கல்பட்டு என 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். ஆனால், இங்குள்ள ஆம்புலன்ஸ் அடிக்கடி பழுதாகி விடுவதால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. கரிக்கலாம் பாக்கம், தவளகுப்பம் மருத்துவமனைகளில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களை நம்பியே இருக்கவேண்டியுள்ளது. இந்நிலையில் திங்கட்கிழமை (மார்ச் 14) கடலூர் - புதுவை சாலை காட்டுக்குப்பத்தில் சாலையை கடக்க முயன்ற பாகூரைச் சேர்ந்த கூலித் தொழி லாளி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக, ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தும் அரியாங்குப்பத்தில் இருந்து வர வேண்டி இருந்ததால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் அந்த வழி யாக வந்த ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த னர். இந்த நிலையை மாற்றி பாகூர், கிரு மாம்பாக்கம் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க வேண்டும் என பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.