பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த 17 எதிர்க் கட்சிகளின் கூட்டம் ‘ஜனநாயக இந்தியாவை பாதுகாப்போம்’ என்ற செய்தியை ஒரே குரலில், வலிமையாக நாட்டுக்கு உணர்த்தியுள்ளது. அடுத்த சந்திப்பு சிம்லாவில் நடக்கும் என்பதை அறிவித்துள்ளனர். பாஜகவுக்கு எதி ரான வாக்குகளை ஒன்று குவிக்கும் விதத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும் அணி உருவாக்கு வது சாத்தியம் என்பதை இது காட்டுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஊடகங்களி டம் பேசும்போது, ‘‘வரும் நாட்களில், இந்த அரசியல் திட்டத்தை இணைந்து முன்னெடுப் போம்’’ என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வகையில், தேர்தல் களத்தில் போராடுவோம் என்றும் உறுதியுடன் பேசினார். தமிழ்நாட்டில் அவ்வாறு ஏற்பட்டிருக்கும் ஒற்றுமையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கே முன்வைத்துள்ளார். அவரைப் போலவே மேலும் 5 முதல்வர்களும், முன்னாள் முதல்வர்களும், தலைவர்களும் ஓரணியில் கரம்கோர்த்து நின்றது இந்த முழக்கத்திற்கு வலுச் சேர்த்துள்ளது. இதுதான் இந்திய நாட்டை பாதுகாக்கும் அணிச் சேர்க்கை. விடுதலை இந்தியாவின் லட்சியங்களை, சமூக நீதியை, மதச்சார்பற்ற ஜனநாயகத்தை, அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் சேர்க்கை. ஒற்றைத் தன்மையை முன்னெடுக்கும், மனுவாத சனாதன ஆர்எஸ்எஸ் ராஷ்ட்டிரா வுக்கு எதிரான போர்க்குரலை வலுப்படுத்தி யுள்ள பாட்னா கூட்டம் வெல்லட்டும். நாட்டிற்கே புதிய நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சட்டும்.
- கே.பாலகிருஷ்ணன்
சிபிஎம் மாநிலச் செயலாளர்