பீகாரில் அரசு விழாவில் உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் திவாஸ் விழா கடந்த செவ்வாயன்று பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடந்தது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்ட இந்த விழாவில் பங்கேற்க மாநிலத்தின் பல பகுதிகளிலும் இருந்து பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்த விழாவில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சில மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.