பீகாரில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பெண்ணை காவலர் மசாஜ் செய்ய சொன்ன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள ரவுஹட்டா காவல் நிலையத்திற்கு ஒரு பெண் புகார் அளிக்க சென்றார். அங்கிருந்த போலீஸ் அதிகாரி சசிபூஷன் சின்ஹா அந்த பெண்ணை தனக்கு மசாஜ் செய்ய கூறி உள்ளார். இது அந்த பெண்ணும் வேறு வழியின்றி மசாஜ் செய்து உள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் காவலர் சசிபூஷன் சட்டை அணியாமல் அமர்ந்துள்ள நிலையில் அந்த பெண் மசாஜ் செய்துகொண்டிருந்த வீடியோ வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து காவலர் சசிபூஷன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.