states

img

பீகார் தலித் பெண்ணுக்கு சிபிஎம் தலைவர்கள் ஆறுதல்

பாட்னா, செப். 27- பீகார் தலைநகர் பாட்னா வில் சாதிவெறிக் குண்டர் களால் நிர்வாணமாக்கி தாக்கப்பட்ட தலித் பெண் ணிற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர் கள் நேரில் ஆறுதல் தெரிவித்தனர். பீகார் தலைநகர் பாட்னா வின் மேற்கே 30 கி.மீ தொலைவில் உள்ள குஸ்ரு பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மோசிம்பூர் கிராம த்தைச் சேர்ந்தவர் ஆஷா  தேவி. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆஷா தேவி யின் கணவர் அப்பகுதியில் கடன் வாங்கியுள்ளார். இதில் கடன் தொகை முழு மையாக கொடுக்கப்பட்ட தாகவும், வட்டி தொகை மட்டும் ரூ.1500 பாக்கி இருந்த தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழ மையன்று (செப்., 23) இரவு  10 மணிக்கு கடன் கொடுத்த  சாதிவெறிக் குண்டர்கள் 6  பேர் ஆஷா தேவியை நிர்வா ணமாக்கி கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் தலையில் காயம் அடைந்த தலித் பெண் கீழே சரிந்து விழுந் துள்ளார். அப்பொழுது கும்பலில் ஒருவர் தலித் பெண் மீது சிறுநீரை எடுத்து வாயில் ஊற்றியுள்ளார். தாக்குதலில் இருந்து தப்பித்து தலையில் ரத்தம் வடிந்த நிலையில் ஆஷா தேவி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  இந்நிலையில், சாதிய வன்கொடுமை தாக்கு தலுக்கு உள்ளான ஆஷா தேவியை  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பீகார் மாநில தலைவர்கள் அவரது வீட்டில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.