பீகார் மாநிலத்தில் காங்கி ரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் - ஐக்கிய ஜனதா தளம் - இடதுசாரிகள் ஆகிய கட்சிகளின் “மகா கூட்டணி” ஆட்சி நடைபெற்று வந்தது. முதல்வராக நிதிஷ் குமார் இருந்தார். கடந்த ஜன வரி மாத இறுதியில் பாஜக வின் மிரட்டல் மற்றும் அப்போ தைய துணை முதல்வரான ராஷ்ட்ரிய ஜனதா தள தலை வர் தேஜஸ்வியின் அசாத்திய மக்கள் நலன் செயல்பட்டால் கலக்கமடைந்த நிதிஷ்குமார் “மகா” மற்றும் “இந்தியா” கூட்டணியில் இருந்து ஓட்டம் பிடித்து மீண்டும் பாஜக உடன் கைகோர்த்து மீண்டும் முதல்வ ரானார்.
நிதிஷ் குமார் முதல்வராக இருந்தாலும் முக்கியத் துறை கள் அனைத்தும் பாஜக விடமே உள்ளது. அதாவது பாஜக சார்பில் இரண்டு துணை முதல்வர்கள் உள்ள னர். அவர்கள் வசமே அதிகார மிக்க துறைகள் உள்ளன. நிதிஷ் குமார் பெயரளவிற்கு முதல்வர் நாற்காலியில் அமர்ந்து பொழுதை கழித்து வருகிறார்.
இந்நிலையில், பீகார் மாநி லத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப் பட மாட்டாது என நிதிஷ் குமா ரின் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் காலித் அன்வர் அறி வித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”பீகார் மாநிலத்தில் வசிக்கும் 13 கோடி மக்களும் பீகாரிகளே. இதனால் மாநிலத்தில் குடி யுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் பதி வேடு (என்பிஆர்) எதுவும் தேவைப்படாது என ஏற்கனவே முதல்வர் நிதிஷ் குமார் தெளிவு படுத்திவிட்டார். பீகார் மாநி லத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடமில்லை” என அவர் கூறியுள்ளார்.
கலக்கத்தில் பாஜக
நடக்கவிருக்கும் மக்க ளவை தேர்தலில் அரசியல் ஆதாயம் பெறவே ஒன்றிய பாஜக அரசு குடியுரிமை திருத் தச் சட்டத்தை அமல்படுத்தும் விதிகளையும், அதற்கான ஆன்லைன் தளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. “இந்தியா” கூட்டணி கட்சி களின் கடும் எதிர்ப்பை கண்டு கொள்ளாமல் சிஏஏ சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்துவோம் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொக்க ரித்துள்ள நிலையில், தனது கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் பீகாரில் சிஏஏ சட் டத்தை அமல்படுத்தமாட்டோம் எனக் கூறியிருப்பது மோடி - அமித் ஷாவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக - ஐக்கிய ஜனதாதள கூட்டணியில் குழப்பம்
நிதிஷ் குமார் “மகா” கூட்டணி யில் முதல்வராக இருந்த பொழுது சிஏஏவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அந்த கருத் தையே காலித் அன்வர் தற்போது கூறியுள்ளார். ஆனால் காலித் அன்வரின் கருத்து ஐக்கிய ஜனதா தளத்தின் தற்போதைய நிலைப் பாடாகவே அறிவிக்கப்பட்டுள்ள தாகவும் தகவல் வெளியாகியுள் ளது. பீகாரில் 17.70 சதவீத முஸ்லிம் மக்கள் உள்ளனர். சிஏஏ விதிகள் அமல்படுத்தப்பட்டால் முஸ்லிம் மக்களின் வாக்குகள் சிதறும் என் பதை கருத்தில் கொண்டு நிதிஷ் குமார், காலித் அன்வரின் கருத்து தொடர்பாக எவ்வித கருத்தும் கூறா மல் அமைதி காத்து வருவதாக தக வல் வெளியாகியுள்ளது. தேர்த லுக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ள நிலையில், சிஏஏ மூலம் பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதாதள கூட்டணிக்குள் குழப் பம் ஏற்பட்டுள்ளது. சிஏஏ விவகாரம் மூலம் பாஜக கூட்டணியில் இருந்து வழக்கம் போல நிதிஷ் குமார் ஓட் டம் பிடித்து விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பாஜக அவரை தீவிரமாக கண்காணித்து வருவ தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.