states

img

பாஜக-வினர் அனைவரும் புனிதமானவர்களா; அவர்களிடம் ரெய்டு நடத்தப்படாதது ஏன்?

பாட்னா, செப். 2 - பாஜக தலைவர்கள் ஒருவர் வீட்டி லும் கூட மத்திய அமைப்புகள் சோத னைகள் நடத்தாதது ஏன்? என்று தேஜஸ்வி கேள்வி எழுப்பியுள்ளார். கேரளத்தில் வியாழனன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஊழல்வாதிகளை சில கட்சிகள் பாதுகாக்கின்றன என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில்,ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜ ஸ்வி, பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். “பாஜக-விடம் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில் யாருடைய வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதா? அவர்கள் அனை வரும் புனிதமானவர்களா? அல்லது பாஜக-வில் சேருபவர் புனிதமான வர்களாக மாறுகிறார்களா? இங்கு ஏன் ரெய்டுகளை நடத்துவ தில்லை? அவர்களை யார் காப்பாற்று கிறார்கள்?” என்று தேஜஸ்வி கேள்வி எழுப்பியுள்ளார். இதனையே பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் குறிப்பிட்டுள்ளார். “நான் கடந்த பல வருடங்களாக அரசி யலில் இருந்து வருகிறேன். வாஜ்பாய் நாட்டின் பிரதமராக இருந்தபோது, அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது, இங்கும் பீகார் மக்கள் பணியாற்ற வாய்ப்பு அளித்துள்ளனர். ஊழல்வாதிகளை யாரும் பாதுகாக்கவில்லை, மற்ற (பாஜக ஆளும்) மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை அவர் கள் (பாஜகவினர்) சிந்திக்கவேண் டும்” என்று நிதிஷ்குமார்கூறியுள்ளார்.