states

கன்சிராமுக்கு ‘பாரத ரத்னா’ : மாயாவதி கோரிக்கை

பீகார் மாநில முன்னாள் முதல்வர் கா்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக குடியரசுத் தலைவா் மாளிகை செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, “தலித் மக்களின் சுயமரியாதைக்காக போராடிய கன்சிராமின் பங்களிப்பும் மறக்க முடியாதது. அவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். “இது கோடிக்கணக்கான மக்களின் விருப்பமாகும்” என்றும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.