பாட்னா,ஜன.15- பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் சோட்டா பஹாரி கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியா கினர். கள்ளச்சாராயம் குடித்த அனைவரும் வெள்ளி யன்று இரவு வீடுகளுக்கு செல்லாமல் கிராமத்தின் தெரு விலேயே படுத்து உறங்கியுள்ளனர். சிலர் வெகுநேரம் ஆகியும் விழிக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவர்களை எழுப்பிய போது, 5 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், ஆபத்தான நிலையில் இருந்த 2 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.