பீகாரில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் மாதேபுரா, பாகல்பூர், பான்கா போன்ற மாவட்டங்களில் சிலர் விஷச்சாராயம் குடித்துள்ளனர். இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக பீகார் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோபால் கஞ்ச் பகுதியில் 10 பேர் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர்.