states

img

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் வீராங்கனை  

இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம் துப்பாக்கி சுடும் வீராங்கனை கவுர் சந்து(வயது 17). இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான இவர் தேசிய, மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் இவர் தனது பரித்கோட் இல்லத்தில் நேற்று காலை தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அண்மையில் நடைபெற்ற 64வது தேசிய துப்பாக்கிச்சூடு போட்டியில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் இவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

;