குறைந்தபட்ச ஆதார விலை உட்பட 13 கோரிக் கைகளை வலியுறுத்தி 2 கட்டமாக தில்லி எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயி களை ஈவிரக்கமின்றி மோடி அரசு தில்லி போலீசார், துணை ராணு வப்படையினரை ஏவி தாக்குதல் நடத்தியது. 2 கட்ட போராட்டங்க ளில் மோடி அரசின் கொடூர தாக்கு தலால் 800க்கும் மேற்பட்ட விவ சாயிகள் உயிரிழந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் மக் களவைத் தேர்தல் பிரச்சாரத் திற்கு வருகை தரும் பாஜக மற் றும் அதன் கூட்டணி கட்சி வேட்பா ளர்களை விரட்டியடித்து வரு கின்றனர். இதனால் பாஜக வேட் பாளர்கள் இரு மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்யாமல் வீடு மற்றும் கட்சி அலுவலகங்களில் முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 2022இல் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் விவசாயி களால் விரட்டியடிக்கப்பட்ட சம்ப வம் போல, மீண்டும் அரங்கேறக் கூடாது என்பதற்காக பீகார் மாநி லம் பாட்னாவில் உள்ள தக்த் ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் குருத்வாரா வில் சீக்கிய பக்தர்களுக்கு தானே உணவு சமைத்து, தானே பரிமாறு வது போல ஷூட்டிங் எடுத்து பஞ்சாப் மக்களின் மனதில் இடம் பிடிக்க திட்டம் போட்டுள்ளார் பிர தமர் மோடி.
சமைத்த உணவை மீண்டும் சமைத்த மோடி
பாட்னா சாஹிப் குருத்வாரா வில் நுழைந்தவுடன் சீக்கியர் களின் தலைப்பாகையை அணிந்து கொண்ட பிரதமர் மோடி, தனது புகைப்பட மற்றும் வீடியோ ஊழியர்களின் முன்னி லையில், சமைத்து வைத்திருந்த உணவை மீண்டும் தானாக சமைப்பது போல சமைத்தும், சப்பாத்தி மாவை ஒரு பிழி பிழிந் தும் ஷூட்டிங் போட்டார். அதன் பின் உணவை தானே கொண்டு வந்து சீக்கிய பக்தர்களுக்கு பரி மாறினார். சீக்கிய மக்கள் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப் பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த பெண்களிடம் காலில் விழுந்து ஒரு கும்பிடு போட்டு, சாஹிப் குருத்வாராவை விட்டு வெளி யேறினார்.
பிரதமர் மோடியின் இந்த குரு வாத்ரா ஷூட்டிங்கை பாஜக வினர் மட்டுமே சமூகவலைத் தளங்களில் விருப்பமான வீடியோ என்று லைக் செய்து வரும் நிலை யில், பஞ்சாப் விவசாயிகள் கண்டுகொள்ளவில்லை. இத னால் மோடியின் ஷூட்டிங் குரு வாத்ராவிற்குள்ளேயே நசித்துப் போனது.
மறக்க முடியாத 2022...
2021இல் போராட்டத்தை ஒடுக்கியதால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என் பதை முன்கூட்டியே உணர்ந்த பிரதமர் மோடி 2022இல் பாட்னா வை போன்று தில்லி குருத்வாரா வில் ஷூட்டிங் நடத்தினார். அதன் பின் பஞ்சாப் நோக்கி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென் றார். ஆனால் பஞ்சாப் மாநில எல்லையான பெரோஸ்பூரி லேயே மோடியை வழிமறித்த விவசாயிகள்,”எங்களை தாக்கி விட்டு, எங்கள் மாநிலத்திற்குள் நுழையக் கூடாது” என தெரி வித்து மோடியை விரட்டியடித்த னர். இந்த சம்பவம் 2022 ஜன வரி 5 அன்று நடைபெற்றது. இந்த சம்பவத்தை திசை திருப்ப பிர தமர் மோடி பஞ்சாப் எல்லையில் உயிர் பிழைத்து வந்தேன் என்று அழுகாத குறையாக கூறினார். இந்த சம்பவம் போன்று தற் போதைய மக்களவைத் தேர்தலி லும் அரங்கேறக் கூடாது என்ப தற்காக மோடி பாட்னா குருத் வாராவில் ஷூட்டிங் போட்டுள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது.