சண்டிகர், ஏப்.1- ஆம் ஆத்மி ஒருங்கிணைப் பாளரும், தில்லி முதல்வரு மான அரவிந்த் கெஜ்ரி வாலை சிறையில் அடைத்த தை சாதகமாக பயன்படுத்தி, ஆம் ஆத்மி ஆளும் தில்லி மற்றும் பஞ்சாப் மாநிலங் களில் குதிரைப் பேரம் மூலம் ஆட்சியை கவிழ்க்க பாஜக தீவிரமாக களமிறங்கியுள் ளது.
இதனை ஆம் ஆத்மி மூத்த தலைவரும், தில்லி அமைச்சருமான சவுரவ் பரத்வாஜ் கடந்த வாரம் ஊட கங்கள் மூலம் குற்றம்சாட்டி னார். இதன் தொடக்கமாக பஞ்சாப் மாநிலத்தின் ஒரே ஒரு ஆம் ஆத்மி எம்பியான சுஷில் குமார் ரிங்கு (ஜலந் தர்) மற்றும் அக்கட்சியின் எம்எல்ஏ ஷீத்தல் அங்கூர் (ஜலந்தர்) ஆகியோரை தங்கள் பக்கம் இழுத்தது பாஜக. சுஷில் குமார் ரிங்கு மூலம் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியை உடைக்க பாஜக தீவிரமாக களமிறங்கி யுள்ளதாக சமூக வலைத் தளங்களில் தகவல் வெளி யாகின.
இந்நிலையில், சமூக வலைத்தள தகவல்களில் கூறியதை போலவே பஞ் சாப் மாநிலம் லூதியானா தெற்கு தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏவான ராஜிந்தர் பால் கவுர், பாஜகவில் இணைய தனக்கு ரூ.5 கோடி பேரம் பேசப்பட்டதாக குற்றம் சாட்டி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ராஜிந்தர் பால் கவுர் தனது புகார் மனுவில், “சுவீடன் தொலைபேசி எண்ணில் தில்லியைச் சேர்ந்த சேவாக் சிங் என்பவர், பாஜகவில் இணைந்தால் ரூ.5 கோடி தருவதாக ஆசை வார்த்தை கூறி பேரம் பேசு கிறார்.
மேலும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும், பாஜகவின் உயர் தலைவர்களுடன் சந்திக்க தான் ஏற்பாடு செய்வதாக வும் சேவக் சிங் கூறினார். மிர ட்டும் தொனியில் அழைப்பு கள் வருவதால் மக்களவை தேர்தல் முடியும் வரை தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. ராஜிந்தர் பால் கவுரின் புகாரின்பேரில் தில்லி பாஜக நிர்வாகியான சேவாக் சிங் மீது பஞ்சாப் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.