பஞ்சாப்பில் ஜலந்தர்-பதான்கோட் சாலையில் டிரக் மீது கார் மோதியதில், கார் தீ பிடித்து எரிந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஹோஷியார்பூர்: ஜலந்தர்-பதான்கோட் சாலையில் கார் உஞ்சி பஸ்ஸி கிராமத்தை நெருங்கியபோது, டிரக் மீது கார் மோதியது.
இந்த விபத்தின்போது பலமாக மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் ஹரியானாவைச் சேர்ந்த டிரக் ஓட்டுநர் சுஷில் குமாரும் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.