states

img

ஜார்க்கண்டில் சாலை விபத்து: 6 பேர் பலி!

ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் நகரில் சாலை தடுப்பின் மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரிலுள்ள பிஸ்துபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள சர்க்யூட் ஹவுஸ் சதுக்கத்திற்கு அருகே அதிகாலை 5:00 மணியளவில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த 3 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இதுகுறித்து போலீஸார் விசாரணை நடந்து வருகிறது.