states

img

நரேந்திர மோடி அரசை எதிர்த்து ஓராண்டு முழுவதும் போராட்டம்!

ஹைதராபாத், டிச.29- தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் தலைமையிலான தெலுங் கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி, 2022-ஆம் ஆண்டை, ஒன்றிய பாஜக அரசுக்கு எதி ரான போராட்ட ஆண்டாக, அறிவித் துள்ளது.  மாதந்தோறும் ஒரு பிரச்சனையை முன்வைத்து, போராட்டங்கள், ஆர்ப் பாட்டங்கள், மோடி அரசுக்கு எதிராக நடத்தப்படும் என்று அந்தக் கட்சி கூறி யுள்ளது. தெலுங்கானா விவசாயிகளின் நெல்லைக் கொள்முதல் செய்ய மறுப் பது தொடர்பாக, ஒன்றிய அரசுக்கு எதி ராக ஏற்கெனவே நவம்பர், டிசம்பர் மாதங்களில் 3 முறை தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி போராட்டம் நடத்தியது.  தற்போது, தெலுங்கானா மாநிலத் திற்கான நிதி ஒதுக்கீட்டில் காட்டப்படும் பாரபட்சம், பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாதது,

ஆந்திரப் பிரதேச மறு சீரமைப்புச் சட்டம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை முன் வைத்து 2022 ஆண்டு முழுவதுமே போராடப் போவதாகவும், இவற்றில் முக்கியமான சில போராட்டங்களில் கட்சித் தலைவரும், முதல்வருமான கே. சந்திரசேகர ராவும் கலந்து கொள் வார் என்றும் அந்தக் கட்சி கூறியுள் ளது.  நவம்பர் மாதம் இந்திரா பார்க்கில் நடந்த போராட்டத்தில் முதல்வர் சந்திர சேகர ராவ் கலந்து கொண்டார். 2014- ஆம் ஆண்டு முதல்வர் பதவிக்கு வந்த பிறகு அவர் கலந்து கொண்ட முதல் போராட்டமாக இது அமைந்தது. 2022-ஆம் ஆண்டு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி நடத்தும் போராட் டங்களில் முதல் போராட்டம் சாதி வாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி நடைபெற உள்ளது.