தெலங்கனாவில் செவ்வாயன்று இரவு முதல் ஏற்பட்ட 4 சாலை விபத்து களில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
செவ்வாயன்று இரவு ஹைதராபாத் புறநகர் பகுதியில் உள்ள மேட்சலில் நடந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். சூர்யாபேட்டை மாவட்டத்தில் நள்ளிரவில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 2 இரு சக்கர வாகனங்கள் எதிரெதிரே ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
அதேபோல் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் தனியார் பேருந்து மோதியதில் ஆந்திராவின் காக்கிநாடாவுக்கு சென்று கொண்டிருந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்தார்.அவருடன் சென்றவர் காயம் அடைந்தார்.
இந்த விபத்துக்கள் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு சக்கர வாகனங்கள் அதிவேகமாக ஓட்டியதும், பேருந்து ஓட்டுநரின் அலட்சியமுமே விபத்துக்கு காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது.