புதுதில்லி, மார்ச் 16- ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந் துள்ள நிலையில், அந்தப் படத்திற்கு நாடாளுமன்றத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்து இருப்பதுடன், பாஜக ஆளும் மாநி லங்களில் அந்தப் படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு, படத்தைப் பார்ப்ப தற்காக அரசு ஊழியர்களுக்கு விடு முறையும் வழங்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆதரவு நடிகர்களான அனு பம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கர வர்த்தி, விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஹிந்திப் படம்தான் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. சுமார் 3 மணி ஓடும் இந்தப் படத்தை விவேக் அக்னி ஹோத்ரி இயக்கியுள்ளார்.
கடந்த ஜனவரி 26- குடியரசுத் தினத்தன்றே வெளியிடுவதற்கு திட்டமி டப்பட்டிருந்த இந்தப் படம், ஒமைக்ரான் பரவல் காரணமாக தடைப்பட்டு, தற் போது மார்ச் 11 அன்று நாடு முழுவதும் 630 திரையரங்குகளில் வெளியாகி யுள்ளது. இந்தப் படத்தைத்தான் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் துவங்கி பாஜக வினர் அனைவரும் கொண்டாடி வரு கின்றனர். தியேட்டர்களில் தங்கள் செல வில் சிறப்புக் காட்சிகளையும் நடத்தி வரு கின்றனர். ஆனால், வரலாற்றைத் திரித்து, முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் பான்மை இந்துக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கும் தீய நோக் கத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருப்ப தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
காஷ்மீரைச் சேர்ந்த மாணவர், தாத்தாவுடன் தில்லியில் வசித்தவாறே ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். தன்னுடைய பெற்றோர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக, தாத்தா தெரிவித்ததை நம்பி வருகிறார். தன்னுடைய ஜேஎன்யு ஆசிரியை ராதிகா மேனன் கூறுவதையும் அப்ப டியே நம்புகிறார். எனினும், தாத்தாவின் இறப்புக்குப் பிறகு அவரின் அஸ்தி யைக் கரைக்க, காஷ்மீர் செல்லும் மாண வருக்கு வேறோர் உலகம் விரிகிறது. தனது பெற்றோர் வன்முறையில் கொல் லப்பட்டதை அறிந்துகொள்கிறார். அந்தக் கல்லூரி மாணவனின் பய ணமே ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் கதைச் சுருக்கம் என்று கூறப்படுகிறது.
அதாவது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1980-களின் பிற்பகுதியிலும் 90-களி லும் காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேறி யதன் பின்னணியை கதைக் களமாக வும், அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகவும் கொண்டே ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை எடுத்தி ருப்பதாக அதன் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவிக்கிறார். ஆனால், “முஸ்லிம்கள் காஷ்மீரி பண்டிட்டுகளைக் கொன்றதாகவும், அவர்கள்தான் பண்டிட்டுகளை வெளி யேற்றியதாகவும் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் சித்தரிக்கிறது; 90-களில் காஷ்மீ ரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இந்துக்கள் மட்டுமே கொடூரமாக கொலை செய்யப்பட்டது போல் காட்டு கிறது; வரலாற்றின் ஒருபக்கத்தை மட்டுமே காட்டி, முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை இந்துக்கள் மத்தியில் வன்முறையை தூண்டுகிறது.
இதுதான் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது சரிதான் என்று ஆளுங்கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறது; நாட்டின் முற்போக்கான கல்வி நிறுவனமான கருதப்படும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் குறித்தும் படத்தில் தவறாக சித்தரிக்கப் பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. காஷ்மீர் கிளர்ச்சியின்போது உயிரி ழந்த இந்திய ராணுவ வீரரின் மனைவி, தன்னுடைய கணவர் குறித்து படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி வழக்கு தொடர்ந்த நிலையில், சம்பந்தப்பட்ட வீரரின் குறித்த காட்சிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஏராளமான சர்ச்சை களுக்குள் சிக்கியிருக்கும் படத்திற்குத் தான் பிரதமர் நரேந்திர மோடி நாடா ளுமன்றத்திலேயே பாராட்டு தெரி வித்துள்ளார். `கருத்து சுதந்திரத்தின் பெயரால் குரல் எழுப்பும் மொத்த ஜமாத்தும் கடந்த 5, 6 தினங்களாக கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
திரைப்படத்தை அதன் தகவல்களுக்காகவும், கலைக்காகவும் விமர்சனம் செய்வதற்குப் பதிலாக, அதனை அவமதிக்க சதித் திட்டம் உரு வாகி வருகிறது’ என்று பேசியுள்ளார். மேலும், “இந்தத் திரைப்படம் சரியானது அல்ல’ என நினைப்பவர்கள் தாங் களே சொந்தமாகத் திரைப்படம் இயக்க வேண்டும். அவர்களை எது தடுக்கிறது? இத்தனை ஆண்டுகளாக அவர்கள் மறைத்து வைத்திருந்த உண்மை வெளியே வந்திருப்பதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்துக்கு பாஜக ஆளும் உத்த ரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரி யானா, குஜராத், கர்நாடகா, உத்தர கண்ட், கோவா, திரிபுரா மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அசாம் மாநில பாஜக அரசு, ஒருபடி மேலே சென்று, தனது மாநில அரசு ஊழியர்கள் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் பார்க்க அரை நாள் சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளது. படத்தைப் பார்த்து, மறுநாள் டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.