states

img

‘குறுக்கு வழி தேடும் ஆந்திர மாநில காவல்துறை’

ஆந்திரா, பிப்.25- அங்கன்வாடி ஊழியர் போராட்டத்தை ஒடுக்க குறுக்கு வழி தேடிய காவல்துறைக்கு சிபிஎம் ஆந்திர மாநிலச் செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விசாகப்பட்டினம் அலுவலகத்தில்  மாநிலச் செயலாளர் வி.சீனிவாசராவ், கட்சித் தோழர்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது மாநிலத்தில் போராட்டம் நடத்தி வரும் அங்கன்வாடி ஊழியர்களை மிரட்டும் முயற்சியிய் ஒரு பகுதியாக காவல்துறையினர் சிபிஎம் அலுவலகத்தை தாக்க முயன்றனர்.  காவல்துறையின் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத் தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிணைந்து இருப்பதை தடுக்க முடியாது என சீனிவாசராவ் கூறியுள்ளார்.