states

img

சிபிஐ விசாரணைக்கு மேகாலயாவும் தடை விதித்தது!

ஷில்லாங், மார்ச் 5- சிபிஐ அமைப்பு விசார ணை நடத்துவதற்கு வழங்கப்பட்டு இருந்த பொது ஒப்புதலை மேகா லயா அரசு ரத்து செய்துள் ளது. இதன்மூலம் இந்த நட வடிக்கையை மேற்கொள் ளும் 9 ஆவது மாநிலம் என்ற  பெயரை மேகாலயா பெற் றுள்ளது. எதிர்க்கட்சிகளை மிரட்ட வும் அரசியல் பழிவாங்கலுக் காகவும் சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுக் கழ கத்தை ஒன்றிய பாஜக அரசு பயன்படுத்தி வருவதாக ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலை யில் மேகாலயா மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இவ்வளவுக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் கட்சி-தான் மேகால யாவில் ஆட்சி செய்து வரு கிறது. கான்ராட் சங்மா முதல் வராக இருக்கிறார். அவ் வாறு இருந்தும் சிபிஐக்கான பொது அனுமதி ரத்து செய் யப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. 2015-ஆம் ஆண்டு மிசோ ரம் மாநிலத்தில் லால் தன் ஹவ்லா தலைமையிலான காங்கிரஸ் அரசு முதன்முத லாக சிபிஐ-க்கு எதிராக இந்த நடவடிக்கையை எடுத்தது. அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், கேரளா ஆகிய மாநிலங்கள் சிறப்பு அதிகா ரத்தை ரத்து செய்து தங்கள் மாநிலத்தில் சிபிஐ நடவ டிக்கையை கட்டுப்படுத் தின. தற்போது இந்த வரிசை யில் மேகாலயாவும் இணைந் துள்ளது.