புதுதில்லி, ஜுலை 25- தொடர்ந்து மழை வெள்ளம் பெருக்கெ டுத்து வருவதால் யமுனை ஆற்றில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி உள்ளது. தற்போதைய நீர்மட்டம் 206.44 மீட்டர். இரண்டு வாரங்களுக்குப் பிறகும், ஆயிரக்கணக்கானோர் இன்னும் நிவாரண முகாம்களில் உள்ளனர். யமுனையின் கிளை நதியான ஹிண்டன் கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கிடையில், வடக்கு தில்லியின் கிராரி யில் உள்ள கட்டிடத்தின் நீர்நிலை அடித்த ளத்தில் மூழ்கி மூன்று வயது சிறுவன் உயி ரிழந்தான். விளையாடு வதற்காக வெளியே வந்த குழந்தை படிக்கட்டில் இருந்து கீழே விழுந்தது. இதற்கிடையில், இமாச்சல், ஹரியானா, உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநி லங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய வானிலை மையம் தீவிர மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், அந்தமான், ஒடிசா, அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநி லங்களிலும் அடுத்த சில நாட்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கி 8 குழந்தைகள் பலி
மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் திங்களன்று ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் 8 குழந்தை கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சியோனியில், தோபிசரா கிராமத்தில் நான்கு சிறுவர்கள் தங்கள் வீட்டின் அருகே உள்ள குளத்தில் மூழ்கி இறந்தனர். பிந்த் மாவட்டத்தில் உள்ள கிச்சோல் கிராமத்தில் உள்ள குளத்தில் குளித்த 11 மற்றும் 14 வயது சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கிராம மக்கள் குழந்தைகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை.
நீரில் கரைந்த பத்ரிநாத் நெடுஞ்சாலையின் 100 மீட்டர்
கனமழை காரணமாக காமேரால் உள்ள கவுச்சார்-–பத்ரிநாத் நெடுஞ்சாலையின் 100 மீட்டர் நீளம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சாலை மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் சாலையை சீரமைத்து போக்குவரத்துக்கு திறக்கும் பணி நடந்து வருகிறது. கவுச்சார் அருகே பட்நகர் என்ற இடத்திலும் சாலை யின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 5 வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை படை தெரிவித்துள்ளது.
ஜுனாகத் மேம்பாலத்தில் சிங்கம்
குஜராத்தின் ஜுனாகத் பகுதியில் கன மழைக்கு மத்தியில் மேம்பாலம் ஒன்றின் குறுக்கே சிங்கம் நடந்து செல்லும் காட்சி வைர லாகி வருகிறது. வாகனங்கள் தொடர்ந்து கடந்து செல்லும் சாலையில் சிங்கம் அமைதி யாக நடந்து செல்வது காட்சிகளில் உள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். கனமழை காரணமாக சிங்கம் தனது வாழ் விடத்தை விட்டு வெளியேறியிருக்கலாம் என்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் சபா கரீம் குறிப்பிட்டுள்ளார். ஜூனாகத்தில் ஏற்பட்ட கடும் வெள்ள த்தில் ஏராளமான கால்நடைகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.