உக்ரைன் மீது ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து வரும் நிலை யில், மனிதாபிமான அடிப்படையில் சில நக ரங்களில் பொதுமக்கள் வெளியேறுவதற்காக தற்காலிக போர் நிறுத்தத்தையும் ரஷ்யா அறிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரை னுக்கு 723 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 5,560.19 கோடி ரூபாய்) மதிப்பி லான கடன்கள் மற்றும் மானியங்களின் தொகுப்பை வழங்க தங்களின் இயக்கு நர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இதே போல பிரிட்டன், ஜப்பான், டென்மார்க், லாட்வியா, லித்துவேனியா மற்றும் ஐஸ் லாந்து நாடுகளும் மொத்தம் ரூ. 234 மில்லி யன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளன.