பாஜக அமைச்சர்களின் இழிவான பேச்சு
ராணுவ வீரர்களின் மன உறுதியையும், தேச பாதுகாப்பையும் பலவீனமடையச் செய்யும்
குடியரசுத் தலைவருக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், அறிவுஜீவிகள் கடிதம்
புதுதில்லி ஏப்ரல் 22ஆம் தேதி நடை பெற்ற பஹல்காம் தாக்குத லுக்கு பதிலடியாக இந்திய விமான ப்படை “ஆபரேசன் சிந்தூர்” என்ற பெயரில், மே 7ஆம் தேதி பாகிஸ் தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகு தியில் உள்ள பயங்கரவாத முகாம் கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தொடர்பாக கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கம் அளித்தனர். பயங்கரவாதிகளின் சகோதரி இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷா, “நமது சகோதரிகளின் குங்கு மத்தை அழித்தவர்களை அவர் களின் (பாகிஸ்தான் பயங்கரவாதி கள்) சகோதரியை (சோபியா குரேஷி) வைத்து பிரதமர் மோடி ஒழித்துவிட்டார்” என முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என அடாவடியாகப் பேசினார்.
மோடியின் காலடியில் ராணுவம்
அதே போன்று மத்தியப் பிரதேச பாஜக துணை முதலமைச்சர் ஜக தீஷ் தேவ்தா ஜபல்பூரில் நடை பெற்ற பயிற்சிக் கூட்டத்தில், “ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக பிர தமருக்கு நன்றி தெரிவிக்க விரும்பு கிறோம்; முழு நாடும், நாட்டின் இராணுவமும், அதன் வீரர்களும் மோடியின் காலடியை வணங்கு கிறார்கள்” என ராணுவத்திற்கு எதி ராகவும், தேசப் பாதுகாப்புப் படைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பேசினார். இந்நிலையில், இந்த இரண்டு சம்பவங்களையும் குறிப்பிட்டு, “பாஜக அமைச்சர்களின் இந்த இழி வான பேச்சு ராணுவ வீரர்களின் மன உறுதியையும், தேசப் பாதுகாப்பை யும் பலவீனமடையச் செய்யும்” என அட்மிரல் விஷ்ணு பகவத், லெப்டி னன்ட் ஜெனரல் விஜய் ஓபராய், லெப்டினன்ட் ஜெனரல் அசோக் வாசுதேவா என ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் 44 பேர் கையொப்பத்துடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டம் அவமதிப்பு
அக்கடிதத்தில், “இந்தியப் பாது காப்புப் படைகளின் உச்சபட்ச தலைமை தளபதியான இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு வணக்கம். அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீதான கொடூரமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் மோதலின் பின்னணியில், பாஜகவைச் சேர்ந்த துணை முதலமைச்சர் ஜகதீஷ் தேவ்தாவும், அமைச்சர் விஜய் ஷாவும் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக வெளியிட்ட இழிவான அறிக்கைகளால் நாங்கள் மன வேதனை அடைந்துள்ளோம். முதலாவதாக, மத்தியப் பிர தேச அமைச்சர் விஜய் ஷா, பாது காப்புப் படைகளின் அதிகாரப் பூர்வ செய்தித் தொடர்பாளர் கர்னல் சோபியா குரேஷியை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சகோதரி என்று குறிப்பிட்டு ஒரு பொது அறிக்கை யை வெளியிட்டார். இந்த அறிக்கை மூலம் விஜய் ஷா தனது பாலின உணர்வற்ற, மதச்சார்பற்ற, பிளவு படுத்தும் மனநிலையை பகிரங்க மாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக பெண்களை மிக மோச மான அளவில் இழிவுபடுத்தியுள் ளார். வகுப்புவாத பிளவுகளைத் தூண்டி, நாட்டின் பாதுகாப்புப் படைகளை அவமதித்தார். இரண்டாவதாக, மத்தியப் பிர தேச பாஜக துணை முதலமைச்சர் ஜகதீஷ் தேவ்தா, “ஒட்டுமொத்த தேசமும், ராணுவமும் பிரதமர் மோடியின் காலடியில் தலை வணங்குகிறது” எனக் கூறி ராணு வத்தை அவமதித்துள்ளார். இதே போன்று 2019ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தை உத்தரப்பிரதேச முத லமைச்சர் ஆதித்யநாத், “மோடி ஜி கி சேனா” எனக் கூறி, மோடி தான் இந்திய ராணுவம் எனக் கூறினார்.
குடியரசுத் தலைவரும் அவமதிப்பு
ஆதித்யநாத்தின் முந்தைய அறிக்கையும், ஜகதீஷ் தேவ்தா வின் சமீபத்திய அறிக்கையும், இந்திய அரசியலமைப்பின் 53ஆவது பிரிவின் ஆன்மாவை அவ மதிப்பதைக் காட்டுகிறது. இந்திய அரசியலமைப்பின் 53ஆவது பிரிவின் படி இந்திய இராணு வத்தின் முழுக்கட்டுப்பாடும் குடியரசுத் தலைவரிடம் மட்டுமே உள்ளது. பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் அல்லது பிறருக்கு, இராணுவத்தின் தலைமை தளபதி களிடம் எந்த கட்டுப்பாடும் பொறுப்பும் கிடையாது. ஆனால், நடைமுறையில் இராணுவ நட வடிக்கைகள் பிரதமர் தலைமை யிலான அமைச்சரவையின் ஆலோ சனையின் படி நிர்வகிக்கப்படு கின்றன. அதேபோல ஜகதீஷ் தேவ்தாவின் கருத்துக்கள் உண்மையில் பாதுகாக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது . குறிப்பாக ஜெகதீஷ் தேவ்தாவின் அறிக்கை ஜனாதிபதி மீதான அவமரியாதை யைக் காட்டுகிறது. மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம், தானாக முன்வந்து விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படு கிறது. தேசிய பாதுகாப்பை காப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக் காகவும், கர்னல் சோபியா குரேஷி மற்றும் பொதுவாக பாதுகாப்புப் படைகளுக்கு ஒற்றுமையைத் தெரி விக்கவும், இரண்டு அமைச்சர் களின் அறிக்கைகளை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக் கிறோம். இரண்டு அமைச்சர்களும் கூறும் அவமதிப்பான அறிக்கை கள் நமது பாதுகாப்புப் படைகளில் பணியாற்றும் பணியாளர்களின் மன உறுதியைப் பாதிக்கக்கூடும். இதன் விளைவாக தேசிய பாது காப்பு மற்றும் பிராந்திய ஒருமைப் பாடு பலவீனமடையும் என்றும் நாங்கள் கருதுகிறோம். பாது காப்புப் படைகளில் ஒழுக்கத்தை நிர்வகிக்கும் கடுமையான சட்டங்கள் மற்றும் விதிகள் காரண மாக, அதில் பணியாற்றும் பணி யாளர்கள் இந்த இழிவான, அவ மானகரமான அறிக்கைகளுக்கு பதிலளிப்பதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர். எனவே, தேசிய ஒற்றுமை மற் றும் பாதுகாப்பின் நலனுக்காக, இதுபோன்ற வருந்தத்கக்க சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அரசாங்கம் எடுக்க வேண்டிய தகுந்த நடவடிக்கைக் கான வழிமுறைகளைப் பிறப்பிக்கு மாறு நாங்கள் உங்களை மரியாதை யுடன் கேட்டுக்கொள்கிறோம். ஜெய் ஹிந்த்!” என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.