states

தோல்வியடைந்த மாநிலமாகவே உ.பி இருப்பது ஏன்?

உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத்  தேர்தல்,  பா.ஜக, மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே நடக்கும் இருமுனை போட்டியாக தெரிகிறது.    அமித் ஷா மற்றும் மாயாவதி இடையே பரிமாறப்பட்ட அன்பான வார்த்தைகள் மறைக்கப்பட்ட திட்டத்தை வெளிப்படுத்துகின்றன. 403 தொகுதிகளி லும் காங்கிரஸ் தனது கொடியையும் சின்னத்தையும் நிலைநிறுத்தியுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலம் அர சியல் மற்றும் பொருளாதார வெற்றிக் கதையாக மாற்றக் கூடிய அனைத்து பண்புகளையும் கொண்டுள்ளது. இது பரந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளது (243,286 சதுர கிமீ), பெரிய மக்கள் தொகை (204 மில்லியன்) கொண்ட  வளர்ந்து வரும் மாநிலமாகும். வற்றாத ஆறுகள் (கங்கை மற்றும் யமுனை), மற்றும்  கடின உழைப்பாளி மக்கள். ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, சரண் சிங், ராஜீவ் காந்தி, விபி சிங், சந்திர சேகர், வாஜ்பாய் என அனைத்து பிரதமர்களை நாடாளுமன்றத்திற்கு தந்த மாநிலம்.  ஆனாலும், பல ஆண்டுகளாக, உ.பி., தோல்வியடைந்த  மாநிலமாகவே கருதப்படுகிறது.

தோல்வியுற்ற’ நிலையை வரையறுக்க வேண்டும். உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித வளர்ச்சி குறியீடுகளில் இருந்து இதை ஆரம்பிக்கலாம். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், தனிநபர் வருமானம் மற்றும் மாநிலத்தின் கடன் சுமை ஆகிய வற்றின் எண்களைச் சேர்க்கவும்; சுகாதாரம் மற்றும்  கல்வி பற்றிய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புத் தரவைச்  சேர்க்கவும்; மேலும் குற்றம், வேலையின்மை மற்றும் இடம்பெயர்வு பற்றிய புள்ளிவிவரங்களைச் சேர்க்க வும். இவற்றின் கூட்டுத்தொகை கசப்பான நிலையை காட்டுகிறது. எனவே இது தோல்வியடைந்த நிலை.

நொண்டிப் பொருளாதாரம்

உத்தரபிரதேசத்தில் கடைசியாக 1980-1989இல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. கடந்த 32 ஆண்டு களில், மாநிலத்தில் பாஜக, எஸ்பி, பிஎஸ்பி ஆகிய மூன்று கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. நல்லது கெட்டதுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். திரு. ஆதித்யநாத் (பாஜக) மார்ச் 2017 முதல் முதல்வராக இருந்து வருகிறார். வேலைவாய்ப்பு, மக்களின்  நல்வாழ்வு மற்றும் தனிநபர் வருமானம்  ஆகியவற்றின் பேரியல் பொருளாதார தரவை மையமாகக் கொண்டு உ.பி மாநிலத்தை ஆய்வுக்கு உட்படுத்துவோம்.  ஆதித்ய நாத்தின் ஆட்சியில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் படிப்படியாகக் குறைந்துள்ளது: உ.பி.யின் தனிநபர் வருமானம் இந்தியாவின் சராசரி வருமானத்தில் பாதிக்கும் குறைவாக உள்ளது.  2017-18 மற்றும் 2020-21 க்கு இடையில், தனிநபர் வரு மானம் உண்மையில் 1.9 சதவீதம் குறைந்துள்ளது. நான்கு ஆண்டுகளில், மாநிலம் தனது கடனில் 40 சதவீதத்தை சேர்த்தது. மார்ச் 2021க்குள், மொத்தக் கடன் ரூ.6,62,891 கோடியாக உயர்ந்துள்ளது.  இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 34.2 சதவீதமாக உள்ளது. நிதி ஆயோக்கின் பல பரிமாண வறுமைக்  குறியீட்டு அறிக்கை 2021 இன் படி, மாநிலத்தின் 37.9 சதவீத மக்கள் ஏழைகள். 12 மாவட்டங்களில் 50 சத வீதத்திற்கும் அதிகமாகவும், மூன்று மாவட்டங்களில் 70 சதவீதமாகவும் ஏழை மக்கள் உள்ளனர்.  உ.பி.  ஒரு ஏழை மாநிலம், அதன் மக்கள்  ஆதித்யநாத்தின் அரசாங்கத்தின் கீழ் மேலும் ஏழைகளாகிவிட்டனர்

இல்லாத ஆட்சி

இளைஞர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள னர். உ.பி.யில் வேலையின்மை விகிதம் நாட்டிலேயே மிக  அதிகமாக உள்ளது. ஏப்ரல் 2018 முதல், 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ளது மற்றும் அந்த  வயதினருக்கான அகில இந்திய விகிதத்தை விட அதிகமாக உள்ளது. 15 முதல் 29 வயதுடைய பெண் களில், ஜூலை-செப்டம்பர் 2020 இல் வேலையின்மை விகிதம் 40.8 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் 2018-மார்ச் 2021க்கான காலமுறை தொழிலாளர் நலத்துறை  கணக்கெடுப்பு தரவுகளின்படி நகர்ப்புறங்களில் உள்ள நான்கு இளைஞர்களில் ஒருவர் வேலையில்லாமல் இருந்தார். இதன் விளைவாக, உ.பி.க்கு வெளியே இடம்பெயர்வது அதிகரித்துள்ளது.  மார்ச் 2020இன்படி இம்மாநிலத்தில் இருந்துதான்  அதிகமானேர் வெளிமாநிலங்களில் குடியேறியுள்ள னர். 12.32 மில்லியன், அதாவது மக்கள் தொகையில் 16இல் ஒருவர்.  மார்ச் 25, 2020 அன்று பிறப்பிக்கப் பட்ட நாடு தழுவிய முழு அடைப்புக்குபிறகு, முக்கிய மாக உ.பி மற்றும் பீகாரை சேர்ந்த  லட்சக்கணக்கா னோர் தங்கள் வீடுகளுக்குத்திரும்பிச் சென்றதை பார்த்தோம். மோசமான ஆட்சியில் உ.பி ஏழை மாநிலமாக இருப்பதால், அங்கு உள்ள தொழிலாளர் நிலை மோசமாக உள்ளது. உ.பி., தனிநபர் கல்விக்காக மிகக்  குறைந்த தொகையை செலவிடுகிறது. மாணவர்-ஆசி ரியர் விகிதம் மாநிலங்களிலேயே மிக அதிகமாக உள்ளது.

 உ.பி.க்கு பற்றாக்குறையை சமாளிக்க 2,77,000 ஆசிரியர்கள் தேவை. ஆண்டு கல்வி நிலை அறிக்கை 2021 இன்படி, பதிவுசெய்யப்பட்ட மாணவர்களில் 38.7 சதவீதம் பேர் கல்வி கற்கிறார்கள், அவர்களின் கற்றல்  தேவைகளை நிவர்த்தி செய்வதில் பள்ளி அமைப்பின் தோல்வியடைந்துள்ளது.  எட்டு மாணவர்களில் ஒருவர்  8ஆம் வகுப்பில் இருந்து வெளியேறுகிறார். உயர்நிலைப் படிப்பில் மொத்த சேர்க்கை விகிதம் (மொத்த பதிவு  விகிதம்) 46.88 சதவீதமாகவும், கல்லூரி, பல்கலைக் கழக அளவில் சேர்க்கை விகிதம் 25.3 சதவீதமாகவும் உள்ளது. சுகாதாரத்துறையின் நிலை சிறப்பாக இல்லை. உ.பி.யின் என்.எம்.ஆர் (35.7), ஐ.எம்.ஆர். (50.4) மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட இறப்பு விகிதம் (59.8) ஆகியவை தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. மருத்துவர்கள் (0.64), செவிலியர்கள் (0.43) மற்றும் துணை மருத்துவர்கள் (1.38) விகிதங்கள் தேசிய சராசரியை விட மிகவும் குறைவாக உள்ளன. 1,00,000 மக்கள்தொகைக்கு மாவட்ட மருத்துவமனை களில் 13 படுக்கைகள் மட்டுமே உள்ளன. நிதி ஆயோக் சுகாதார குறியீட்டில், 2019-20 முடிவடையும் நான்கு சுற்றுகளில், உ.பி. கீழே தரவரிசையில் உள்ளது.

தேர்தலுக்குப் பிறகு, என்ன?

ஆதித்யநாத்தின் ஆட்சி முறை மிகவும் குறைபாடு டையது. அவர் சத்தமாகப் பேசுகிறார், ஒரு பெரிய தடியை எடுத்துச் செல்கிறார். இது சர்வாதிகாரம், சாதி மேலாதிக்கம், மத வெறுப்பு, காவல்துறையின் அத்துமீறல்கள் மற்றும் பாலின வன்முறை ஆகிய வற்றின் ஆபத்தான கலவையை அடிப்படையாகக் கொண்டது. அரசியல் சொற்களஞ்சியம் ‘என்கவுன்டர்’, ‘புல்டோசர்’ மற்றும் ‘80 வெர்சஸ் 20’ போன்ற வார்த்தை களால் நிரம்பியுள்ளது. ‘மதம் மக்களின் அபின்’ என்ற  கருதுகோளை நிரூபிக்க முயற்சிக்கும் சந்தேகத்திற் குரிய தனித்தன்மை பாஜகவுக்கு உண்டு. உ.பி., தேர்தல், பா.ஜ., மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே நடக்கும் இருமுனை போட்டியாக தெரிகிறது.  அமித் ஷா மற்றும் மாயாவதி இடையே பரிமாறப்பட்ட அன்பான வார்த்தைகள் மறைக்கப்பட்ட திட்டத்தை வெளிப்படுத்துகிறது. 403 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனது கொடியையும் சின்னத்தையும் நிலைநிறுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் இதை பிரதிபலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.