தில்லி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கை மூடிமறைப்பது ஏன்?
தலைநகர் தில்லியின் புராரி பகுதி யில் தனது நண்பரின் 17 வயது மகளை பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற் றச்சாட்டின் பேரில் மூத்த அரசு அதிகாரி ஒருவர் திங்களன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு அதிகாரியும் அவரது மனைவியும் சேர்ந்து வற்புறுத்தி தனக்கு கருக்கலைப்பு செய்ததாக பாதிக்கப்பட்ட மைனர் பெண் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக் கப்பட்ட மைனர் பெண்ணை காண தேசிய மற்றும் தில்லி மகளிர் ஆணைய உறுப்பி னர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர்.
மகளிர் ஆணையம் குற்றச்சாட்டு
“பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட மைனர் பெண்ணை காண தில்லி அரசு மருத்துவமனைக்கு வந்த பொழுது எங் களை உள்ளே அனுமதிக்கவில்லை. பெண்ணின் தாயார் எங்களை சந்திக்க விரும்பவில்லை என்று கூறியதாக மிரட்டும் நோக்கில் போலீசார் கூறினர். இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க போலீஸ் கமிஷனர் எங்களை சந்திக்க மறுக்கிறார். இளம்பெண்ணின் பாலியல் பலாத்கார விவகாரத்தை மூடி மறைக் கவே இவ்வாறு அரங்கேறுகிறது” என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி திங்களன்று கூறினார். இந்நிலையில், தில்லி அமைச்ச ரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சவுரப் பரத்வாஜ் செய்தியாளர்கள் சந்திப்பில், “ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள தில்லி போலீசார் ஏன் இந்த விவகாரத்தை மறைக்க முயற்சிக்கி றார்கள்? ஒருவேளை இந்த சம்பவத்தில் பாஜகவிற்கு தொடர்பு எதுவும் இருக்கி றதா? இல்லை வேறு எதுவும் கூட்டுச் சதியா? அழுத்தங்களால் தில்லி போலீ சார் அவரை கைது செய்யவில்லையா? பாதிக்கப்பட்ட பெண்ணை தில்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவாலை சந்திக்க விடாததற்கு என்ன காரணம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.