states

img

பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியமான ‘செபி’ அதானி குழுமம் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

புதுதில்லி, பிப். 10 - “ஒன்றிய பாஜக அரசின் அழுத்தம் காரணமாகவே, அதானி குழுமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதா?” என இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்திற்கு (SEBI) காங் கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறி யிருப்பதாவது: “இந்தியப் பங்குச் சந்தையின் மதிப்பைக் காப்பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள செபி தவறியுள் ளது. இது இந்திய நிதிச் சந்தையின் நோ்மைத்தன்மை குறித்த கேள்வியை எழுப்புகிறது. நிதி மோசடிகளில் ஈடுபடுவோ ருக்கு எந்த நாடும் பாதுகாப்பு வழங்கக் கூடாது என்றும் வங்கி மோசடிகளைத் தடுப்பதற்காக அவற்றுக்கான சா்வதேச விதிகளைத் தளா்த்த வேண்டும் என்றும் ‘ஜி20’ கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தாா். ஆனால், பிரதமரின் ஆதரவு பெற்ற தொழிலதிபர்களே அத்தகைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்த முரணை உலகத் தலை வர்கள் ஏற்கமாட்டார்கள். அதானி குழுமம் பெரும் மோசடி களை நிகழ்த்தியதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் அக்குழுமத்தைச் சேர்ந்த நிறு வனங்களின் பங்குகள் சரிந்துள்ளன. ஜனவரி 24 முதல் பிப்ரவரி 6-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அதானி குழுமத்தின் இழப்பு ரூ. 9 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உள்ளது. அந்த நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு களும் வீழ்ச்சியைக் கண்டதால்,  லட்சக்கணக்கான சில்லரை முத லீட்டாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அதானி குழுமத்தின் மீது கடந்த 2016-ஆம் ஆண்டே குற்றச்சாட்டு எழுந்தது. அதற்காக அக்குழுமம் செபி-யின் விசாரணை வளையத்தில் உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் கடந்த 2021-இல் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால், அதற்குப் பிறகு அந்த விசாரணை என்ன ஆனது எனத் தெரியவில்லை. தற்போதைய மோசடி குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும் அதானி  குழும நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தொடா்ந்து அனுமதிக்கப்படுகின்றன. அக்குழுமத்தின் மீது ‘செபி’ நட வடிக்கை எடுப்பது எப்போது? அதானி  குழுமத்தின் மீதான நடவடிக்கையைத் தாமதப்படுத்த ஒன்றிய அரசு அழுத்தம் அளிக்கிறதா? சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்கள் அதானி நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால்,  தேசிய பங்குச் சந்தை இன்னும் நட வடிக்கை எடுக்காமல் உள்ளது. அதானி  மீதான மோசடி புகார் குறித்து முறை யாக விசாரித்து, முதலீட்டாளா்களின் நலனைக் காக்க வேண்டிய பொறுப்பு செபி-க்கு உள்ளது.” இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.