states

img

மார்ச்சில் 14.55 சதவிகிதத்தைத் தொட்டது மொத்த விலைப் பணவீக்கமும் அதிகரித்தது!

புதுதில்லி, ஏப்.18- நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையி லான சில்லரைப் பணவீக்க விகிதம் (CPI), கடந்த மார்ச்  மாதத்தில், 6.95 சதவிகிதமாக உயர்ந்தது. இது கடந்த 17  மாதங்களில் இல்லாத மிகமோசமான பணவீக்க விகிதம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் மொத்த விலைப் பணவீக்கமும் (WPI) 14.55 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத பணவீக்க அதிகரிப்பு ஆகும். மேலும், கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச்சில் மொத்த விலைப் பணவீக்கம் 7.89 சதவிகிதமாக இருந்த நிலை யில், அது தற்போது ஒரே ஆண்டில் 14.55 சதவிகிதம் என இரட்டிப்பாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல், கடந்த 12 மாதங்களாகவே இந்தியாவில் மொத்த விலைப் பணவீக்கம் இரட்டை இலக்கத்திலேயே பதி வாகி வருகிறது. கடந்த 2021 நவம்பரில் அதிகபட்சமாக மொத்த விலைப் பணவீக்கம் 14.87 சதவிகிதமாக இருந்தது. இது 2022 ஜனவரியில் 12.96 சதவிகிதமாகவும், பிப்ரவரி யில் 13.11 சதவிகிதமாகவும் இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் 14.55 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் பணவீக்கம் உயர்ந்ததற்கு, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, கனிம எண்  ணெய், உலோகங்கள் ஆகியவற்றின் விலை உயர்வே காரணம் என்று கூறப்படுகிறது.