states

img

அம்பானிக்காக சூறையாடப்படும் தில்லி ‘அசோக்’ ஹோட்டல்

புதுதில்லி, பிப்.5- தலைநகர் தில்லியில் அரசுக்குச் சொந்தமாக இருக்கும் புகழ்பெற்ற ஐந்து நட்சத்திர ‘ஹோட்டலான ‘அசோக்’கை, தனியாருக்கு விற்க மோடி அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில், அதனை முகேஷ் அம்பானி கைப்பற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்று ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கோடியும், அடுத்த நான்காண்டுகளுக்குள் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை குத்தகைக்கு விட்டு  ரூ. 6 லட்சம் கோடியும் நிதி திரட்ட மோடி அரசு திட்டமிட்டது. இதில், ‘ஏர் இந்தியா’வை ரூ. 18 ஆயிரம் கோடிக்கு விற்று முடித்துள்ள பாஜக அரசு, அடுத்ததாக எல்ஐசி பங்குகள், பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆகிய நிறு வனங்களைக் குறிவைத்திருக்கிறது.

இதற்கிடையே, குறுகிய கால ஏற்பாடாக இந்திய சுற்றுலா மேம் பாட்டுக் கழகத்தின் (India Tourism Development Corporation - ITDC) கட்டுப்பாட்டில் உள்ள தில்லியின் புகழ்பெற்ற ஹோட்டல் அசோக்-கையும் (The Ashok Hotel) விற்ப தற்கான முயற்சியில் இறங்கியுள் ளது. ஏற்கெனவே, வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய அரசு இருந்த போதே, அவரது மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா, அசோக் ஹோட்டலை விழுங்குவதற்கு திட்ட மிட்டார்; ஆனால், அன்று சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த ஜக் மோகன் அதற்கு ஒப்புக்கொள்ள வில்லை என்று 2000-ஆவது ஆண்டு காலகட்டத்தில் செய்திகள் வெளியா கின.  இந்நிலையில், வாஜ்பாய் ஆட்சி யில் முடியாததை எல்லாம், மோடி ஆட்சியில் செய்து முடித்துவிடுவது என்று தீவிரமாகி இருக்கும் பாஜக  அரசு, அசோக் ஹோட்டலையும் சூறையாட முடிவு செய்துள்ளது.

தில்லியின் மையமான லுட்யென்ஸ் பகுதியில், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அரு கில், தூதரக அலுவலகங்கள் அதிகம் உள்ள இடத்தில்- 1956-ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முன்முயற்சியில் கட்டப் பட்டதுதான் அசோக் ஹோட்டல். ஜம்மு - காஷ்மீர் மன்னர் குடும்பத் தால், அரசாங்கத்திற்கு வழங்கப் பட்ட 25 ஏக்கர் நிலத்தில், 500-க்கும் மேற்பட்ட அறைகளுடன் மிகப்பிரம் மாண்டமாக இந்த ஹோட்டலை நேரு எழுப்பினார். பின்னர், தில்லி யின் அடையாளங்களில் ஒன்றா கவே அது மாறியது. இந்நிலையில்தான் புகழ்பெற்ற அசோக் ஹோட்டலை தனியாருக்கு சுமார் 60 முதல் 90 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது மட்டுமல்லா மல், ஹோட்டலைச் சுற்றியுள்ள சுமார் 8 ஏக்கர் நிலத்தில் 6.3 ஏக்கர் நிலத்தை ஹோட்டல் அல்லது சர்வீஸ்  அபார்ட்மெண்ட் கட்டிக் கொள்ள அனுமதிப்பது;

1.8 ஏக்கர் நிலத்தை வர்த்தக நோக்கத்தில் பயன் படுத்திக் கொள்ள அனுமதிப்பது என்று மோடி அரசு தீர்மானித்தது. இதனை எப்படியாவது விலைக்கு வாங்கி விடுவது என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியும் தற்போது களத்தில் இறங்கியுள்ளார். முகேஷ் அம்பானி சமீபகாலமாக ஹோட்டல் தொழிலில் தீவிரம் காட்டி வருகிறார். மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சில் நவீன வசதி களுடன் மாநாட்டுக் கூடம் அடங்கிய ஹோட்டலை கட்டி வருவதுடன், வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற ஹோட்டல்களை வளைத்துப் போட்டு வருகிறார்.  இங்கிலாந்து நாட்டின் பக்கிங் காம்சையரில் உள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பின் நடுவே 49 படுக்கை யறைகள், கோல்ப் திடல், 13 டென் னிஸ் ஆடுகளங்கள், 14 ஏக்கரிலான பூங்கா ஆகியவற்றை கொண்ட ‘ஸ்டோக் பார்க்’ என்ற கிளப்பை 79 மில்லியன் டாலருக்கு (சுமார் 500 கோடி ரூபாய்) அம்பானி கடந்த ஆண்டு விலைக்கு வாங்கினார்.  அமெரிக்காவின் நியூயார்க், சென்ட்ரல் பார்க் பகுதியில் - 248  அறைகள், நடன விடுதிகள், ‘ஸ்பா’, மதுபான கூடங்கள் உள்ளிட்ட வசதி களைக் கொண்ட, ‘மாண்டரின் ஒரி யண்டல் நியூயார்க்’ என்ற பிரம் மாண்ட நட்சத்திர ஹோட்டலையும் அண்மையில் ரூ.730 கோடிக்கு கைப்பற்றினார்.  இந்தியாவில் மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட, கிழக்கு இந்திய ஹோட்டல்ஸ் லிமிடெட் நிறுவனம் நடத்தி வந்த ஹோட்டல் ஓபராயில் முதலீடு செய்த முகேஷ் அம்பானி, தனது மனைவி நீதா அம்பானியை அந்நிறு வனத்தின் இயக்குநர்களில் ஒரு வராக்கினார். அதைத் தொடர்ந்தே, அரசுத்துறை நிறுவனமான ‘தி அசோக் ஹோட்டலை’ அம்பானி குறிவைத்துள்ளார். மோடி அரசும் விரைவிலேயே அசோக் ஹோட் டலை அம்பானிக்கு கைமாற்றும் என்று கூறப்படுகிறது.