புதுதில்லி, மே 21 - உலக நாடுகளில் நிலவும் பெட்ரோல் விலை நிலவரம் குறித்து, ‘பாங்க் ஆப் பரோடா’ வங்கி பொருளாதார ஆய்வு (BOB Economics Research) ஒன்றை நடத்தி அதன் அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. மொத்தம் 106 நாடுகளின் விலை விவரங்க ளை ‘பாங்க் ஆப் பரோடா’ தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருந்தது. அதன்படி, அமெரிக்கா, சீனா, ஹாங் ஹாங், பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, கிரீஸ், பிரான்ஸ், போர்ச்சுகல், நார்வே ஆகிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவு என்றும், இந்த நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2 டாலருக்கும் அதிகம் என்றும் கூறியிருந்தது. இந்தியாவில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 1.35 டாலராக உள்ளது. விலை அதிகம் நிலவும் நாடுகளில் இந்தியா 42-ஆவது இடத்தில் தான் உள்ளது. இந்தியாவைக் காட்டிலும் 50 உலக நாடுகளில் பெட்ரோல் விலை அதிகம். உலக நாடுகளின் சராசரி பெட்ரோல் விலை 1.22 டாலராக உள்ளது என்று தெரிவித்தி ருந்தது. அதேநேரத்தில் வியட்நாம், கென்யா, உக்ரைன், வெனிசுலா ஆகிய நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் என்பதையும் ‘பாங்க் ஆப் பரோடா’வின் பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டது. குறிப்பாக, இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், இலங்கையைக் காட்டிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் என்பதை சுட்டிக்காட்டியது. இந்நிலையில் மோடி அரசு, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளைக் காட்டி, அதை விடக் குறைவான விலையிலேயே பெட் ரோலை விற்கிறோம் என்று சமாளிக்குமா, அல்லது தன்னை விட சின்னஞ்சிறிய பாகிஸ் தான், இலங்கை, நேபாளம் போன்ற நாடுக ளைக் காட்டிலும் அதிகமான விலைக்கு பெட்ரோலை விற்கிறோமே என்பதற்காக வெட்கித் தலைகுனியுமா? என தெரிய வில்லை.