புதுதில்லி, ஜன. 17 - புதுதில்லியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப் பட்டுள்ளன. தில்லியில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று நடத்தப்படும் விழாவில் பல்வேறு மாநிலங்களின் சிறப்பம்சங்களைப் பறைசாற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெறும். இந்த ஆண்டு மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளை மட்டுமே ஒன்றிய அரசின் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.
கேரள அரசு எதிர்ப்பு
கேரளாவின் அலங்கார ஊர்தி தேர்வாகாததற்கு அம்மாநில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். தங்கள் மாநில அலங்கார ஊர்தி யில் சங்கராச்சாரியாரின் வாழ்க்கை வர லாறு இடம்பெற வேண்டுமென ஒன்றிய அரசு எதிர்பார்த்ததாகவும், ஆனால் சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு குறித்த முக்கிய அம்சங்கள் இடம் பெற்றதால் நிராகரித்துள்ளதாகவும் கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் கடிதம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வஉசி, மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்றும் இது ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாட்டு மக்களின் உணர்வையும் தேசபக்தியையும் புண்படுத்துவதாக உள்ளது என்றும் பிரதமர் இதில் உடனே தலையிட்டு விடு தலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நா ட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதிசெய்யுமாறு கூறியுள்ளார்.
மேற்குவங்கம் அதிருப்தி
மேற்குவங்க அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்படாததற்கு அதிருப்தி தெரிவித்துள்ள அம்மாநில முத லமைச்சர் மம்தா பானர்ஜி, அதுபற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாட்டுக்கு சேவையாற்றிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் சிறப்பம்சங்களுடன் தாங்கள் அலங்கார ஊர்தியை வடிவமைத்திருந்ததாக சுட்டிக் காட்டியுள்ளார்.