பீகாரைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்திலும் கடந்த 2 மாதங்களாக டெங்கு காய்ச் சல் பாதிப்பு எண்ணிக்கை மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. மாநில தலைநகர் கொல்கத்தா, வடக்கு 24 பர்கா னாஸ் மாவட்டங்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உருக் குலைந்துள்ளது. வடக்கு 24 பர்கா னாஸ் மாவட்டத்தில் மட்டும் அதிக பட்சமாக 8,000க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், மாநிலம் முழு வதும் 36,000-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை மிக மோசமான அளவில் இருந்தாலும் ஆளும் திரி ணாமுல் காங்கிரஸ் அரசு பலியா னோர் எண்ணிக்கையை வெளியிட மறுத்து வருகிறது. கல்லூரி மாணவி பலி குருதாஸ் கல்லூரியில் மூன் றாம் ஆண்டு படித்து வந்த 20 வயது மிக்க மாணவி காய்ச்சல் அறிகுறி களுடன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட போது அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப் பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப் பட்ட பொழுதிலும் அவர் செவ்வா யன்று சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இந்த உயிரிழப்பு விவகா ரம் கல்லூரி மாணவர்கள் மூலம் வெளியாகியுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.