புதுதில்லி, மே 24 - யார் என்ன சொன்னாலும், பிரத மர் நரேந்திர மோடிதான் புதிய நாடா ளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைப்பார் என்று உள்துறை அமைச் சர் அமித்ஷா அறிவித்துள்ளார். “புதிய நாடாளுமன்ற கட்டடம் என்பது பிரதமர் நரேந்திர மோடி யின் கனவு என்றும், அவரது தலை மையிலான அரசின் 9 ஆண்டு கால சாதனைக்கு எடுத்துக்காட்டு” என் றும் அமித்ஷா பொங்கியுள்ளார். அரசியலமைப்பு நெறிமுறை களை மீறி, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை, குடியரசுத் தலைவ ரைக் கூட அழைக்காமல், பிரதமர் மோடி எதேச்சதிகாரமான முறை யில் திறந்துவைக்க முடிவு செய் துள்ளார். “இரு அவைகளையும் உள்ள டக்கியதாக இந்திய நாடாளுமன்றம் இருக்கும். குடியரசுத் தலைவர் அதன் தலைவராக இருப்பார்” என்று இந்திய அரசியலைப்புச் சட்டத்தின் 79-ஆவது சட்டப்பிரிவு தெளிவுபடுத்துவதை சுட்டிக்காட்டி யும் பிரதமர் மோடி அதனைக் கேட் கத் தயாரில்லை. அதுமட்டுமல்ல, நாடாளு மன்றத்தை திறந்து வைப்பதற்கு அவர் தேர்வு செய்திருக்கும் மே 28 என்ற தேதியும் மிக வன்மமானதாக உள்ளது.
‘மகாத்மா காந்தியின் அகிம்சை வழியில்வந்த நாடு இந்தியா’ என்றே உலகம் போற்றி வரும், அந்த இந்தியாவை பிளவுபடுத்தும் வகையில், ‘இந்துத்துவா’ எனப் படும் பிரிவினைவாத விஷத்தை பரப்பியவரும், பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களுக்கு ஏவல் வேலை செய்து கொண்டு, நாட்டின் விடு தலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவரும், கோட்சேவின் குரு நாதராக இருந்து, மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் நீதிமன்றத் தில் நிறுத்தப்பட்டவருமான வி.டி. சாவர்க்கரின் பிறந்த நாளைத்தான், நாடாளுமன்றத்தைத் திறந்துவைக்க மோடி அரசு தேர்ந்தெடுத்துள்ளது. பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த அமித் மால்வியா இதனை டுவிட்டரில் மிகப் பெருமையாகவும், குறிப்பிட்டிருந்தார். “புதிய நாடா ளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி 28-ஆம் தேதி திறந்து வைக்கி றார். அன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள். சாவரக்கர் இந்தியா வின் மகத்தான மகன்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு அரசியலமைப்புப் பிரிவு 60, 79 மற்றும் 111 ஆகிய வற்றில் ‘குடியரசுத் தலைவரே நாடா ளுமன்றத்தின் தலைவர்’ என குறிப்பிட்டிருப்பதை மறைத்து விட்டும், குடியரசுத் தலைவரைத் திட்டமிட்டு ஒதுக்கிவிட்டும், வி.டி. சாவர்க்கர் பிறந்த நாளில் நாடாளு மன்ற புதியக் கட்டடத்தை நானே திறப்பேன் என்று பிரதமர் மோடி அறிவித்திருப்பதை ஏற்க முடி யாது என எதிர்க்கட்சிகள் அறிவித் துள்ளன. நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாகவும் 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் புதிய நாடாளு மன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என உள் துறை அமைச்சர் அமித்ஷா திட்ட வட்டமாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு ஆதினங்கள், மோடிக்கு செங்கோல் வழங்குவார்கள்
பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான அரசின் 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தில்லி யில் செய்தியாளர்களிடம் பேசி யிருக்கும் அமித்ஷா, “புதிய நாடா ளுமன்ற கட்டடடத் திறப்பு விழா வின்போது, சோழர்களின் செங் கோல் பிரதமர் மோடியிடம் அளிக் கப்படும். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்கு சான்றாக சோழ சாம்ராஜ்யத்தின் செங்கோல் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதினங்கள் தில்லியில் பிரதமரிடம் செங்கோலை ஒப்ப டைப்பர். புதிய நாடாளுமன்ற கட்ட டம் என்பது பிரதமர் நரேந்திர மோடி யின் கனவு. பிரதமர் மோடி அரசின் 9 ஆண்டு கால சாதனைக்கு எடுத் துக்காட்டுதான் புதிய நாடாளுமன்ற கட்டடம்” என்று கூறியுள்ளார். மேலும், “புதிய நாடாளுமன்றத் தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட 60 ஆயிரம் பேரை பிரதமர் கவுர விப்பார்; தமிழ்நாட்டில் உள்ள ஆதி னங்கள் வழங்கிய செங்கோல்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இடம்பெறும். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைப்பார்” என் றும் குறிப்பிட்டுள்ளார்.
அலுவலகம், நூலகத்தைத் திறப்பதும் நாடாளுமன்ற கட்டடத்தையே திறப்பதும் ஒன்றா?
ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு பதிலடி
நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வ தாக கூறியிருக்கும் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “1975ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தை திறந்து வைத்தார் என்றும் 1987, ஆகஸ்ட் 15 அன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நாடாளுமன்ற நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினார்” என்பதையும் சுட்டிக் காட்டி, அப்போது நீங்கள் ஏன், குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதில ளித்துள்ளார். “அதிகாரிகள் பணிபுரியும் இணைப்பு கட்டடத்திற்கும், மிகவும் குறைவாக பயன்படுத்தப்படும் நூலகத்தை திறப்பதற்கும், இந்தியா என்ற ஜனநாயக கோயிலின் கருவறையாக விளங்கும் நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன” என்று அவர் கூறியுள்ளார். மேலும், “1975-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாடா ளுமன்ற இணைப்புக் கட்டடத்தை திறந்து வைத்தார் என்றாலும், இதற்கு 1970 ஆகஸ்ட் 3 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி கிரி மூலமே கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இது மே 2014 இல் ‘பார்லிமென்ட் ஹவுஸ் எஸ்டேட்’ என்ற தலைப்பில் லோக்சபா செயலகம் வெளியிட்ட அறிக்கை யிலேயே கூறப்பட்டுள்ளது. அதேபோல நாடாளுமன்ற நூலகக் கட்டடத்துக்கு, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி 1987-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று, அப்போதைய மக்களவைத் தலைவர் சிவராஜ் வி பாட்டீல் பூமி பூஜை செய்தார் என்றும் மக்களவை வெளியீடே தெரிவித்துள்ளது” என்றும் விளக்கியுள்ளார்.