states

ஆடை, ஜவுளி துறைகளின் நிதிநெருக்கடிக்கு தீர்வு வேண்டும் !

புதுதில்லி, ஜூலை 24- ஆடை மற்றும் ஜவுளி ஆலைத் துறைகளில் உள்ள நிதிநெருக்கடி யைத் தீர்த்திட ஒன்றிய அரசு  நடவடிக்கைகள் எடுத்திட வேண் டும் என்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மக்களவைக் குழுத் தலைவர்  பி.ஆர். நடராஜன் வலியுறுத்தி னார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரு கிறது. நாடாளுமன்ற நடத்தை விதி 377-இன் கீழ் அவசரப் பொது  முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத் தில் பி.ஆர். நடராஜன் பேசிய தாவது: வரலாற்றில் முன்னெப்போ தும் இல்லாத அளவிற்கு இந்தியா வில் ஆடை மற்றும் ஜவுளி ஆலைத் துறைகள் நிதி நெருக்கடி யைச் சந்தித்து வருகின்றன.  இந்தத் துறைகள் அதிகமான அள வில் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. சுமார்  4 கோடி மக்கள் நேரடியாகவும், இந்தத் துறை சம்பந்தப்பட்ட இதர துறைகளில் சுமார் 6 கோடி  மக்களும் பல்வேலை வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டிருப்பதாக ஒன்றிய ஜவுளி அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.   தவ றான கொள்கைகள், அலட்சியம்,  பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, அதீத  மின் கட்டணம்,

ஏற்றுமதி-இறக்கு மதிக் கொள்கைகளின் காரண மாக பன்னாட்டுச் சந்தையில் இந்திய ஜவுளி மற்றும் ஆடை களின் ஏற்றுமதி கணிசமான அளவு குறைந்துள்ளமை, பருத்தி  மீது விதிக்கப்பட்ட 11 விழுக்காடு  இறக்குமதி வரி முதலானவை  இத்துறைகளில் கடும் நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளன. உக்ரைன் போர், பன்னாட்டு நிதி நெருக்கடி, விலை உயர்வு  முதலானவைகளும் இவற்றின்  மீது பாதிப்புகளை ஏற்படுத்தி யுள்ளன. இவ்வாறு இத்துறைகள் கடும்  நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருந்திடும் இவ்வேளையில் வங்கிகள் கடன் கொடுக்க மறுக் கின்றன. எனவே, இத்துறைகளில் ஏற்பட் டுள்ள நெருக்கடியைச் சமாளித் திட அரசு, என்டிசி (NTC) ஆலை களில் பருத்தி நூல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்திட முன்வர வேண்டும். பருத்தி மீதான 11 விழுக்காடு இறக்குமதி வரியை  விலக்கிக் கொள்ள வேண்டும். மூன்று வருட காலத்திற்கான இஎம்ஐ(EMI) தடைக்காலத்தை (moratorium) ஆறு ஆண்டு களாக நீட்டித்திட வேண்டும். அசல் தொகையைத் திருப்பிச் செலுத்த அளிக்கப்பட்ட ஒரு வருட தடைக்காலத்தை நீட்டித்திட  வேண்டும். வங்கிகள் மூலம் புதிய கடன்களை அளித்திட வேண்டும். இவ்வாறு ஒன்றிய அரசாங் கம் நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும். ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் கலந்தாலோசித்து இவற்றின் மீதான கொள்கைகளை அரசு உரு வாக்கிட வேண்டும் இவ்வாறு பி.ஆர். நடராஜன் வலியுறுத்தியுள்ளார். (ந.நி.)