புதிதில்லி, செப். 17- எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே ‘விஸ்வகர்மா திட்டத்தை’ பிர தமர் மோடி ஞாயிறன்று தொடங்கி வைத்தார். 77-வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களி டம் உரையாற்றிய பிரதமர் பாரம்பரி யத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழி லாளர்கள், கைவினைஞர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு ரூ.13,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், ‘பி எம் விஸ்வகர்மா’ எனப் பெயரிட்டுள்ள இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி மூலம் தொழில் சார்ந்த கருவிகளை வாங்க ரூ.15,000 ஊக்கத் தொகைவழங்கப்படும். முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். சரி யாக திருப்பிச் செலுத்தினால், இரண்டாம் தவணையாக ரூ.2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப் படும் என அறிவித்தார். மேலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பொற்கொல்லர்கள், இரும்புத் தொழில் சார்ந்த வேலை செய்யும் தொழிலாளர்கள், சலவைத் தொழில் செய்பவர்கள், முடி திருத்து பவர்கள், கொத்தனார்கள் என்று தங்கள் கருவிகளைக் கொண்டு வேலை செய்து வருபவர்களுக்காக செப்டம்பர் 17 ‘விஸ்வகர்மா ஜெயந்தி’ அன்று அந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித் திருந்தார். பாரம்பரியமாக ஒரு தொழிலைச் செய்ய ஏன் வற்புறுத்த வேண்டும், செருப்புத் தைப்பவர், சலவைத் தொழி லாளர், முடிதிருத்துபவர் பிள்ளைகள் வேறு படிப்பைப் படித்து முன்னேற விடாமல், இப்படி முட்டுக்கட்டை போடு வதை எப்படி ஏற்க முடியும் என விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிர்க்கட்சி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலை யிலும், இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் ஞாயிறன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தில்லி துவாரகா வில் யஷோபூமி சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தையும், தில்லியில் நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பாதையையும் திறந்து வைத்து மெட்ரோ ரயிலில் பயணித்தார்.